காங். ஆட்சி வருவதை நான், ப.சி, வாசன் மட்டுமே விரும்புகிறோம்-இளங்கோவன்

இளங்கோவன், மத்திய அரசின் சாதனை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அகில இந்திய காங் தலைவர் சோனியா தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார். தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். காங் தொண்டர்கள் திருப்தியில் உள்ளார்களா என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
அரசு கேபிள் டிவி அடக்கமாக செயல்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கேபிள் டிவி திட்டம் முடக்கப்பட்டுள்ளது. உமாசங்கர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறவேண்டும்.
தமிழகத்தில் ஓரே குடும்பத்தில் அனைவரும் அரசியலில் உள்ளது போன்று இந்தியாவில் பஞ்சாபில் இந்த நிலை உள்ளது.
தமிழக காங் தலைமை செயலற்ற நிலையில் உள்ளது. காங் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கத்தக்க நிலையில் தலைமை இல்லை. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாதவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்ததே தலைமைதான். இதனால் மிகவும் காங் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காங் கட்சியில் ஜி.கே.வாசன், சிதம்பரம், இளங்கோவன் ஆகியோர் மட்டுமே தமிழகத்தில் காங் ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications