இலவச அடுப்பு-எரிவாயு: தமிழக அரசுத் திட்டம் நாடு முழுவதும் அமல்!
Subscribe to Oneindia Tamil

இப்போது புதிதாக எரிவாயு இணைப்புப் பெற விரும்பும் வாடிக்கையாளர் பிணைத் தொகையாக 1,250-ம், ரெகுலேட்டருக்கு 150-ம் ஆக மொத்தம் 1,400 செலுத்த வேண்டும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிப்பதற்காக பட்ஜெட்டில் 490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 35 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத எரிவாயு அடுப்புகளை உபயோகிக்கும் முறையை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications