காங்கிரஸும் திருச்சியில் கூட்டம்-சோனியா காந்தி பேசுகிறார்
சென்னை: அதிமுக, திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸும் திருச்சியில் பொதுக் கூட்டம் போடுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியே பங்கேற்கவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக முதலில் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி அனைவரையும் அதிர வைத்தது. இதையடுத்து திமுக சார்பிலும் ஒரு கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கருணாநிதி அதில் பேசினார். அதன் பின்னர் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக் கூட்டம் போட்டனர். அதில், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட கூட்டம் நடந்தது. இதற்குப் போட்டியாக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸும் சோனியா காந்தியை வரவழைத்து திருச்சியில் பிரமாண்டக் கூட்டத்தைப் போடவுள்ளதாம்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா சிறப்பு பொதுக் கூட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்
இணையும் விழா அக்டோபர் 9ம் தேதி மாலையில் திருச்சியில் நடைபெறுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாப்படும் இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றபார்கள்.
அக்டோபர் 9ம் தேதி காலையில் புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications