வளிமண்டல சுழற்சியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை
சென்னை: வங்கக் கடலில், வளி மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இது மேலும் 24 மணி நேரத்திற்குநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென் மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேல்மத்திய வங்கக் கடலில் வளி மண்டலத்தின மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
கடல் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போவதைத் தவிர்க்க வேண்டும். தமிழக, புதுச்சேரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில்காற்று வீசக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 9 செமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்றுஇரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று வானம் பொதுவாக மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடியம மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.