கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு: கேரள போலீஸ் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கள்ளத் துப்பாக்கிகளைக் களையெடுக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு அளிக்கப்படும் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
மலப்புரம் அருகே 4-வது மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கில் தன்னை கைது செய்ய வந்த எஸ்.ஐ. விஜய கிருஷ்ணனை முஜிப் என்பவர் சுட்டுக் கொன்றார். விசாரணையில் முஜிப் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததும், அதை பயன்படுத்தி எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் ஏராளமானோர் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளத் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க திருச்சூர் ஐ.ஜி. முகமது யாசிம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளத் துப்பாக்கிகள் குறித்து எஸ்.எம்.எஸ்.க்கள் மூலம் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என்றும், தகவல் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications