கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு: கேரள போலீஸ் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கள்ளத் துப்பாக்கிகளைக் களையெடுக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
கள்ளத் துப்பாக்கி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு அளிக்கப்படும் என கேரள காவல்துறை அறிவித்துள்ளது.
மலப்புரம் அருகே 4-வது மனைவி தொடர்ந்த ஜீவனாம்சம் வழக்கில் தன்னை கைது செய்ய வந்த எஸ்.ஐ. விஜய கிருஷ்ணனை முஜிப் என்பவர் சுட்டுக் கொன்றார். விசாரணையில் முஜிப் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததும், அதை பயன்படுத்தி எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் ஏராளமானோர் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கள்ளத் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க திருச்சூர் ஐ.ஜி. முகமது யாசிம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளத் துப்பாக்கிகள் குறித்து எஸ்.எம்.எஸ்.க்கள் மூலம் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என்றும், தகவல் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications