கருணாநிதி என்னிடம் சொன்ன ரகசியம்!!: வைகோ

அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் நடந்த மதிமுக திறந்தவெளி மாநாட்டில் அவர் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலோடு திமுகவின் சரித்திரம் முடிந்தது. அரசு அதிகாரத்தை வைத்துக்கொண்டு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் போடும் ஆட்டம் கொஞ் சநஞ்சமல்ல.
கொலை, கொள்ளை, ஊழல்களை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வரும் தேர்தலில் எங்கள் கட்சி மட்டுமல்ல. எங்கள் கூட்டணியின் பிரச்சாரமே கருணாநிதியின் குடும்பமும் ஜனநாயகமும் என்ற தலைப்பில்தான் அமைந்திருக்கும். அப்படித்தான் பிரச்சாரம் செய்ய போகிறோம்.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் தமிழகம் பாலைவனமாக போகிறது. மக்களை சுரண்டும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழிக்க போகும் போர்வாளாக மதிமுக தொண்டர்கள் இருப்பார்கள்.
அண்ணா காலத்து திமுகதான் தமிழகத்திலிருந்து இந்தியை துரத்தியடிக்க போராட்டம் செய்தது, இந்தி எதிர்ப்புப் போராட்டமே திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. தமிழ் தமிழ் என்று திமுக மேடை தோறும் முழங்கியது.
ஆனால், திமுக பிரமுகரின் மகன் ஒருவர் தான் இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கான சின்னத்தை வரைந்து தந்துள்ளார். அதுவும் திராவிட மேடைகளில் எதிர்க்கப்பட்ட, திமுகவால் துரத்தப்பட்ட தேவநாகரி மொழியில் அந்த சின்னத்தை உருவாக்கித் தந்துள்ளார்.
எவ்வளவு பெரிய அநியாயம்?. அந்த இளைஞனுக்கு கருணாநிதி பொன்னாடை போர்த்தி அவரைப்பற்றி முரசொலியில் கட்டுரை எழுதுகிறார். இது எவ்வளவு பெரிய துரோகம்.
கருணாநிதி இந்தியை தமிழகத்தில் நுழைக்க முயற்சி செய்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
திமுகவை அண்ணா தொடங்கியபோது பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகிய வற்றை காப்பதே இயக்கத்தின் நோக்கம் என்று சூளுரைத்தார். இன்று அவற்றை காப்பதற்காக மதிமுக போராடி வருகிறது.
இதுவரை உங்களுக்கு தெரியாத, சொல்லாத ரகசியத்தை தற்போது உங்களிடம் கூறுகிறேன். இது கருணாநிதியே என்னிடம் சொன்னது.
பொடா சட்டத்தின் கீழ் நான் வேலூர் சிறையில் இருந்தபோது என்னை வந்து சந்தித்தார் கருணாநிதி. அப்போது சிறையிலிருந்து வெளியே வா என்று நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து என்னிடம் கோரிக்கை விடுத்தார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரிடம் சீட் பற்றி கேட்க சென்றிருந்தேன்.
என்னுடன் சிறையிலிருந்த கணேசமூர்த்திக்காக ஒரு தொகுதியைக் கேட்டேன். முடியாது என்றவரிடம் எனக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. என்னுடன் இருந்த அவருக்கு தந்தால் தான் சிறப்பாகயிருக்கும் என வாதாடினேன். அவர் முடியாது எனச் சொல்லிவிட்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தவர் என்னிடம், என் மறைவுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. அதன் பின் அதிமுகவும் நீயும் தான் என்றார்.
நான் அப்படியெல்லாம் சொல்லாதீங்க தலைவரே, நீங்க 100 ஆண்டுகள் வாழ்வீர்கள் என்றேன்.இப்போதும் சொல்கிறேன் நீங்கள் வாழ்வீர்கள். உங்கள் கண் முன்னாலேயே உங்களது குடும்பம் சிதறி சின்னாபின்னமாவதை நீங்கள் காண்பீர்கள்.
வரும் தேர்தலுக்கு பின் திமுக இருக்காது. நீங்கள் சொன்னது போல அதிமுகவும், மதிமுகவும் தான் இருக்கும் என்றார் வைகோ.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications