சுப்பிரமணிய சாமியின் தலை இலங்கைக்கு அனுப்பப்படும்: மல்லை சத்யா

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த மதிமுகவின் திறந்த வெளி மாநாட்டில் பேசி அவர்,
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார்.
ஐ.நா. சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அறிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார்.
இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராடும் மக்களுக்கும், போராளிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் இங்குள்ள சுப்பிரமணிய சாமி எங்கள் தலைவர் வைகோவை நாடு கடத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
ஈழத் தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணிய சாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications