திட்டமிட்டபடி செப்டம்பர் 24ல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு-அலகாபாத் உயர்நீதிமன்றம்

இதையடுத்து தீர்ப்பு திட்டமிட்டபடி செப்டம்பர் 24ம் தேதி வெளியிடப்படுவது உறுதியாகியுள்ளது.
அயோத்தியில், ராமர்ஜென்ம பூமி, பாபர் மசூதி உள்ள இடம் யாருக்குச் சொந்தம்? கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா என்பது குறித்த சர்ச்சை பல காலமாக நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக லக்னோ பெஞ்ச்சில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பெரும் பரபரப்பான வழக்கில் செப்டம்பர் 24ம் தேதி லக்னோ பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.
இந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதை இன்று லக்னோ பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர், இந்த மனு விசாரணைக்கு தகுதி உடையது அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனுவைத் தாக்கல் செய்த நபருக்கு ரூ. 10லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முழு ஆயத்த நிலையில் அரசு:
திட்டமிட்டபடி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோர்ட் கூறி விட்டதால், உ.பி. முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் கலவரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சூழ்நிலையை சமாளிப்பதற்காக பெரும் ஆயத்தங்களுடன் அரசு தயாராகியுள்ளது.
கிட்டத்தட்ட 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4000 புற ராணுவப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். உ.பி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பெருமளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீர்ப்பை அளிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம், லக்னோ பெஞ்ச் ஆகியவற்றுக்கு 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். எந்த பிரிவினரும், மற்ற பிரிவினர் மீது வன்முறையை பிரயோகிக்கக் கூடாது என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications