Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய 3-வது போர்க் கப்பல்: கராச்சியில் தயாராகும் 4-வது கப்பல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடற்படைத் தலைமை தளபதி பஷீர் நேற்று ஷாங்காயில் தரையில் இருந்து தரையிலும், தரையில் இருந்து வின்னிலும் தாக்கும் அதி நவீன ஏவுகணைகளைக் கொண்ட போர்க் கப்பல் எப்- 22 பி பிரிகேட்டை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். இது பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் 3-வது போர்க் கப்பல் ஆகும்.

இது குறித்து பஷீர் கூறியதாவது,

முதல் இரண்டு பிரிகேட்டைப் போன்றே இதுவும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் போர்க் கப்பலின் வரவால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் பலம் அதிகரி்க்கும். மேலும், பாகிஸ்தான் கடற்படை தனது பாதையில் முன்னேறவும் இது உதவும்.

கடந்த 2005-ம் நான்கு போர்க் கப்பல்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக சீனா ஒப்பந்தம் செய்தது.

பி.என். எஸ். சைப், பி.என். எஸ். ஜுல்பிகர், பி.என். எஸ். ஷம்ஷீர் என்பது தான் அந்த கப்பல்களின் பெயர்களாகும்.

கராச்சியில் உள்ள கப்பல் கட்டும்தளத்தில் நான்காவது கப்பல் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணி திருப்திகரமாக இருக்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

போர்க் கப்பல்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவைக் காட்டுகிறது. இந்த உறவு அனைத்து துறைகளிலும் உள்ளது என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+