ப.சிதம்பரத்திற்குப் பிறந்த நாள்-பத்திரிக்கையாளருக்கு சட்டவிரோத சிறை
காரைக்குடி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையடுத்து முன்பு அவர் மீது செருப்பு வீசிய காரைக்குடியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாயல்ராமை போலீஸார் சட்டவிரோதமாக அடைத்து வைத்து சிதம்பரம் போன பின்னர் விடுவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நேற்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை வாழ்த்தி டிஜிட்டல் பேனர், கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு இலவச உதவி என அமர்களப்படுத்தினர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலங்கை பிரச்சனை தீராமல் இருக்க ப.சிதம்பரம் தான் காரணம் எனக் கூறி அவர் மீது செருப்பை வீசினார் பத்திரிக்கையாளர் சாயல்ராம். அப்போது ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்யாமல் அடித்து உதைத்து விட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு சாயல்ராமை போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று சட்டவிரோத காவலில் வைத்து வியாழக்கிழமை மாலை தான் விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications