கல்லூரியை விட்டு வெளியேற சித்தா மாணவர்கள் மறுப்பு: தொடரும் போராட்டம்
நெல்லை: நெல்லை சித்தா மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகள் காலவரையின்றி மூடப்பட்டாலும் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இரவு வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு மையத்தை பாளை ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3-வது நாளாக நேற்று முன்தினமும் முற்றுகை போராட்டம் நடத்தியதால் கல்லூரியை காலவரையின்றி மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளும் மூடப்பட்டன. கல்லூரி நிர்வாகம் இதற்கான நோட்டீசை இரவு நேரத்தில் ஒட்டியதால் மாணவ, மாணவிகள் கொதிப்படைந்தனர்.
கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் விடுதியில் 400 மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் இரவு நேரத்தில் எங்கும் செல்ல முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications