For Daily Alerts
Just In
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெறும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முப்பெரும் விழாவில் அக் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்து கொள்கிறார்.
தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, காமராஜர் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார்.
மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் நடைபெறும் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
Comments
Story first published: Saturday, September 18, 2010, 11:52 [IST]