ஜெ. வீடு அருகே அதிமுகவினர் திடீர் முற்றுகைப் போராட்டம்
சென்னை : சென்னை போயஸ் கார்டனுக்கு நேற்று இரவு வந்த அதிமுகவினர் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு நேற்று மாலை வேன்கள், கார்களில் ஏராளமான அதிமுக தொண்டர் வந்தனர். அவர்களை சாலையின் முகப்பிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஜெயலலிதா வீட்டுக்குச் செல்ல வேண்டும் எங்களை விடுங்கள் என்று அவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், சைதை துரைசாமி குடும்பத் திருமணத்திற்காக கொடநாட்டிலிருந்து சென்னை வந்திருந்த ஜெயலலிதா, கல்யாணத்திற்குப் போய் விட்டு போயஸ்கார்டன் திரும்பினார். அவரைப் பார்த்த அதிமுகவினர் வட சென்னையைக் காப்பாற்றுங்கள் அம்மா என்று கோஷமிட்டனர். அவர்களைப் பார்த்து ஜெயலலிதா கும்பிட்டபடி வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் அவர்களில் சிலரை மட்டும் வரச் சொன்னார். இதையடுத்து சிலர் மட்டும் வீ்ட்டுக்குச் சென்றனர். அவர்களிடம் என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டு அறிந்தார் ஜெயலலிதா. பின்னர் அவர்கள் கொடுத்த மனுவையும் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.
வெளியில் வந்த அவர்களிடம் செய்தியாளர்கள் என்ன பிரச்சினை என்று கேட்டபோது, இது எங்களது குடும்பப் பிரச்சினை, நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம். அம்மாவிடம் கூறியுள்ளோம். அவர் சரி செய்வார் என்று மட்டும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications