கொல்கத்தாவில் நடந்த வாலிபால் போட்டியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவி்ல் நேற்று நடந்த வாலிபால் போட்டியின்போது தேசிய கீதத்தை திடீரென நிறுத்தி அதை அவமதித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில், ஆசிய சீனியர் வாலிபால் சேம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. நேற்று நேதாஜி உள்ளரங்கில் இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான போட்டி நடந்தது.

போட்டிக்கு முன்பு இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டன. இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோது பாதியிலேயே அதை நிறுத்தி விட்டனர்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து போட்டிகளின் தலைவர் ஏ. ரமணா ராவ் கூறுகையில்,

நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் அடங்கிய மூல நகல் பிரதியில் ஒவ்வொரு நாட்டின் தேசிய கீதத்திற்கும் 45 விநாடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

நம் நாட்டு தேசிய கீதம் 1 நிமிடம் 15 விநாடிகள் பாடுவதால் 45 விநாடிக்குள் முடிக்க முடியவில்லை. இதனால் அந்த கால அளவுக்குள் பாடலை நிறுத்தி விட்டனர்.

தேசிய கீதத்தை சுருக்கித் தருமாறு இந்திய ஒலிம்பிக் அமைப்பைக் கேட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+