For Quick Alerts
For Daily Alerts
Just In
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
நேற்று பிற்பகலில் புதுச்சேரியில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி தொடங்கினர் தொழிலாளர்கள்.
சம வேலைவாய்ப்பு, நிரந்தர வேலை, பணி முறைப்படுத்தல், போனஸ் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் நேற்று உதவி தொழிலாளர் ஆணையர் சிவராஜன், என்எல்சி அதிகாரி பெரியசாமி, கடலூர் மாவட்ட ஏஐடியூசி செயலாளர் பி.சேகர் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
வேலைநிறுத்தம் குறித்து பி.சேகர் கூறுகையில், மொத்தம் உள்ள 17 தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தியும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.
Comments
Story first published: Monday, September 20, 2010, 14:34 [IST]