என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

NLC Unit
நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 13,000 ஒப்பந்த தொழிலாளர்களும் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நேற்று பிற்பகலில் புதுச்சேரியில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி தொடங்கினர் தொழிலாளர்கள்.

சம வேலைவாய்ப்பு, நிரந்தர வேலை, பணி முறைப்படுத்தல், போனஸ் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

முன்னதாக புதுச்சேரியில் நேற்று உதவி தொழிலாளர் ஆணையர் சிவராஜன், என்எல்சி அதிகாரி பெரியசாமி, கடலூர் மாவட்ட ஏஐடியூசி செயலாளர் பி.சேகர் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் குறித்து பி.சேகர் கூறுகையில், மொத்தம் உள்ள 17 தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தியும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+