தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காங்.கின் விருப்பம்-இளங்கோவன்

நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த 4 மாதமாக கூறிவருகிறேன். கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் கமிஷன் பெறப்படுகிறது. இதில் யார் யாருக்கு போகிறது என தெரியவில்லை. இந்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால், தமிழக அரசு இதற்கு உடந்தையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்கிறார்கள். இதனை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.
நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலையையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராதாபுரத்தில் இருந்து முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை அகற்றப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை
வைக்கவில்லை, காமராஜர் சிலையையும் வைக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்துள்ளோம். கன்னியாகுமரியில் மார்ஷல் நேசமணி மற்றும் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்காக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications