அயோத்தி தீர்ப்பு-'பல்க்' எஸ்எம்எஸ் அனுப்ப செப். 29 வரை தடை நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் மொத்தமாக எஸ்.எம்.எஸ், எம்எம்எஸ் அனுப்ப விதித்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தடையை செப்டம்பர் 29ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கான தடை உத்தரவு நேற்றே அமலுக்கு வந்தது. நாளை வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அயோத்தி தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 29ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

தீர்ப்பையொட்டியும், தீர்ப்பிற்குப் பிறகும் விஷமிகள், விஷமனத்தனமான செய்திகளையும், படங்களையும் அனுப்பாமல் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது.

இது செமி பைனல்-ஜி.கே.பிள்ளை:

முன்னதாக அயோத்தி தீர்ப்பை செமி பைனல் போலத்தான் என்று வர்ணித்திருந்தார் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை. இதுகுறித்துத அவர் கூறுகையில், இது ஒரு போட்டியின் செமி பைனல்தான். இறுதிப் போட்டிஅல்ல. தீர்ப்பு வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல்தான் வரவுள்ளது. இஸ்லாமியர்கள் அதற்குள் தங்களது வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்திருப்பார்கள்.சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாகும். எனவே திங்கள்கிழமை அப்பீல் செய்ய முடியும். அதன் பின்னர் மீண்டும் தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது என்றார் பிள்ளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+