ஆஸ்திரேலியா செல்வதற்காக அழைத்து வரப்பட்ட 57 இலங்கை அகதிகள் ஊட்டியில் கைது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:ஆஸ்திரேலியா செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரால் அழைத்து வரப்பட்ட 57 இலங்கைத் தமிழர்களை ஊட்டியில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர், 11 குழந்தைகளும் இடம் பெற்றிருந்தவர். இவர்கள் சென்ற வாகனங்களை கூடலூர் சாலையில் வைத்து போலீஸார் மடக்கி அனைவரையும் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்து இவர்கள் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அனைவரையும் மசினகுடி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் புழல், சேலம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications