பங்குகள் மூலம் ரூ. 3.5 லட்சம் கோடி நிதி திரட்டிய பிரேசில் எண்ணெய் நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

Petrobras
சா பாலோ: பிரேசில் அரசின் எண்ணெய் நிறுவனமான பெட்ரோபிராஸ் உலகில் இதுவரை எந்த நிறுவனமும் திரட்டாத அளவுக்கு பங்குகள் மூலம் ரூ. 3.5 லட்சம் கோடி (70 பில்லியன் டாலர்) அளவுக்கு நிதி திரட்டியுள்ளது.

வெளிநாடுகளில் எண்ணெய் படிமங்கள் உள்ள பகுதிகள், எண்ணெய் கிணறுகளை வாங்க இந்த நிதியை பெட்ரோபிராஸ் பயன்படுத்தவுள்ளது.

வரும் 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுக்குள் தனது பெட்ரோலிய ஏற்றுமதியை பலமடங்கு உயர்த்தி, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க பிரேசில் திட்டமி்ட்டுள்ளது.

இதற்காக ரூ. 10.25 லட்சம் கோடி (224 பில்லியன் டாலர்கள்) செலவிட பிரேசில் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இப்போது ரூ. 3.5 லட்சம் கோடியை பெட்ரோபிராஸ் திரட்டியுள்ளது.

ரியோ டி ஜெனிரோவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை கச்சா எண்ணெய் நிறைந்த வளைகுடாவைச் சேர்ந்த பல முன்னணி நிதி நிறுவனங்களும் அமெரிக்க பரஸ்பர நிதி நிறுவனங்களும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+