முன் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கண்டக்டரை நியமிக்க கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கண்டக்டர்களை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்த்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில்,

இந்தியா முழுவதும் ஓடும் ரயில்களில் முன் பதிவு செய்த பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகளில் ஏற பயணிகள் சாதாரண டிக்கெட் எடுக்கிறார்கள். இதற்காக டிக்கெட் கெளண்டர்களில் வரிசையில் நின்று டிக்கெட் பெற தாமதம் ஏற்படுகிறது. இதனால் வரிசையில் நிற்கும்போதே ரயில்களை தவற விடுகின்றனர். டிக்கெட் எடுத்த பிறகும் முன்பதிவு செய்யாத பெட்டியை தேடி, கடைசி நேரத்தில் அலைவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிச் சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் சாதாரண பெட்டிகளில் ஏற முடியாத நிலை உள்ளது. எனவே இந்தியா முழுவதும் கெளண்டர்களை மூடிவிட்டு முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கு உள்ளேயே ஓடும் ரயிலில் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்காக ஓடும் ரயில்களில் கண்டக்டர்களை நியமிக்க ரயில்வே துறைக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரணைக்கு ஏற்று ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+