For Daily Alerts
Just In
பல்க் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதற்கான தடை செப். 30 வரை நீட்டிப்பு
டெல்லி: அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக செப்டம்பர் 29ம் தேதி வரை பல்க் எஸ்.எம்.எஸ்.கள், எம்எம்எஸ்கள் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை தற்போது 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் தொலைத்தொடர்பு சேவையாளர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றார்.
அயோத்தி தீர்ப்பு முதலில் 24ம் தேதி வெளியாவதாக இருந்தது. இதையடுத்து 22ம் தேதி முதல் 3 நாட்களுக்கு எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து எஸ்எம்எஸ்ஸுக்கான தடை செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 30ம் தேதி வரை அதை நீட்டித்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, September 25, 2010, 11:31 [IST]