For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சையில் இடி தாக்கி 3 பேர் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சை நகரமே பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவால் விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், இடி தாக்கி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ளது தேமாநல்லூர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெயராம், ரமேஷ் உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்கள் வழக்கம் போல் வயலுக்குச் சென்றுள்ளனர். திடீர் என்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த மரத்தடியில் நின்றனர். அப்போது மரத்தில் இடி விழுந்தது.

இதில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்களில் 3 பேர் இடிதாக்கி உடல்கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X