தஞ்சையில் இடி தாக்கி 3 பேர் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை நகரமே பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவால் விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், இடி தாக்கி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ளது தேமாநல்லூர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெயராம், ரமேஷ் உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்கள் வழக்கம் போல் வயலுக்குச் சென்றுள்ளனர். திடீர் என்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த மரத்தடியில் நின்றனர். அப்போது மரத்தில் இடி விழுந்தது.

இதில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்களில் 3 பேர் இடிதாக்கி உடல்கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+