அயோத்திப் பிரச்சினையைத் தீருங்கள் அல்லது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்-பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil
சாகர்திகி: ஒன்று அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்க முயலுங்கள். இல்லாவிட்டால் அதுதொடர்பான தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், அயோத்தி நிலத்திற்கு உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்திருக்கும் இரு தரப்பினரும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும். அது முடியாவிட்டால், கோர்ட் தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இருப்பினும் தீர்ப்பை வர விடாமல் தடுக்க காங்கிரஸ் கட்சி முயல்வதாக எழுந்துள்ள மறைமுக குற்றச்சாட்டு குறித்து பிரணாப் முகர்ஜி அப்போது எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications