For Daily Alerts
Just In
அயோத்தி-காமன்வெல்த்: ஐ.பி, உள்துறை அதிகாரிகளுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
இதில் உள்துறை செயலாளர், கேபினட் செயலாளர் மற்றும் மூத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அயோத்தி வழக்கில் அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுதினம் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலவாரியாக பாதுகாப்பு நிலைமை, தீர்ப்புக்குப் பின் எங்கெங்கு பிரச்சனை வரலாம் என்பது குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையின்போது டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Story first published: Tuesday, September 28, 2010, 18:00 [IST]