காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை தள்ளி வைக்க கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டியை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஊழல்களும் மலிந்துள்ளன. இதனால் நாட்டுக்கு அவப் பெயர் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு மாதத்திற்குப் போட்டியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அஜய் குமார் அகர்வால் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அறிவித்து வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தனது மனுவில் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார் மனுதாரர் அஜய் குமார் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications