தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினரின் கருணை மனு ஜனாதபதியை சென்றடைந்தது
இருப்பினும் இதுகுறித்து இன்னும் தமிழக அரசுக்குத் தகவல் வரவில்லை. தகவல் வந்தால், தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என சிறைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 பேரின்தூக்குத் தண்டனையையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அக்டோபர் 8ம் தேதி மூன்று பேரையும் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராகவன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிமுக, மூன்று பேருக்காகவும் கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. அதன்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் வேலூர் சிறைக்குச் சென்று மூன்று பேரிடமும் கருணை மனு தாக்கலுக்கான மனுவில் கையெழுத்து பெற்றனர்.
அதேசமயம்,மூன்று பேரும் சிறை நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தனர். தமிழக அரசு இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
தற்போது இந்த மனு குடியரசுத் தலைவர் மாளிகையை சென்றடைந்து விட்டதாம். இதுகுறித்து விரைவில் தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து தமிழக அரசு வேலூர் சிறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்த பின்னர்தான் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். தகவல் வரும் வரை தண்டனைக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் சேகர் தெரிவித்துள்ளார்.