சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிபிஐ அதிகாரியின் மகளைக் கடத்திக் கற்பழித்ததாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் இரு மகன்கள் கைதாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிபிஐ அதிகாரியின் மகள் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் போயுள்ளார். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் அவர் நின்றிருந்தபோது, அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன்களான மல்கீத் சிங் (20), சஞ்ஜீத் சிங் (22) ஆகியோர், அப்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் வீட்டில் விடுவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார் அப்பெண். ஆனால் அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், அருகே உள்ள போலீஸ் குவார்ட்டர்ஸுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்குள்ள மைதானத்தில் வைத்து பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னார். இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications