அயோத்தியை வைத்து காங்கிரஸ் அரசியல் நாடகம்: கல்யாண் சிங்
லக்னெள: அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருவதாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறியுள்ளார்.
அரசியல்ரீதியில் ஒதுக்கப்பட்டுவிட்ட கல்யாண் சிங், கடந்த வியாழக்கிழமை தனது பலத்தைக் காட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு பெரும் பரபரப்புக்கிடையே வந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவாக கூட்டம் கூடவில்லை. இதனால் அதிருப்தியுடன் லக்னெள திரும்பிய அவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
அயோத்தி வழக்கை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருகிறது. தீர்ப்பை ஒத்தி வைப்பதை வரவேற்றுள்ளதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு வந்து விடக்கூடாது என்று அந்தக் கட்சி நினைப்பது தெளிவாகிவிட்டது.
வழக்கை நீட்டிப்பதன் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது.
அயோத்தி விவகாரம் முடிந்து விட்டால் அவர்கள் அதை வைத்து அரசியல் நடத்த முடியாது.
எனவே இந்த விவகாரம் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதை வைத்து அரசியல் நடத்தவே விரும்புகின்றனர்.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாது என்பது முன்னரே உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காலம் கடத்தும் முயற்சி.
அயோத்தி நிலம் என்பது உண்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த விஷயம். நீதிமன்றத்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை அளிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் கல்யாண் சிங்.
அரசியல் ஆதாயம் தேடும் பாஜக-காங்கிரஸ் புகார்:
அயோத்தி விவகாரத்தில் பாஜக தொடர்ந்து அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், தீர்ப்பு கூறுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததற்குக் கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக முயல்கிறது.
அயோத்தி விவகாரத்தில் பாஜக பொறுப்பற்று செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும், அல்லது பேச்சு மூலம் தீர்க்க வேண்டும் என்ற இரு வழிகள் மட்டுமே உள்ளன என்றார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications