அயோத்தியை வைத்து காங்கிரஸ் அரசியல் நாடகம்: கல்யாண் சிங்
லக்னெள: அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருவதாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறியுள்ளார்.
அரசியல்ரீதியில் ஒதுக்கப்பட்டுவிட்ட கல்யாண் சிங், கடந்த வியாழக்கிழமை தனது பலத்தைக் காட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு பெரும் பரபரப்புக்கிடையே வந்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவாக கூட்டம் கூடவில்லை. இதனால் அதிருப்தியுடன் லக்னெள திரும்பிய அவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
அயோத்தி வழக்கை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் நாடகமாடி வருகிறது. தீர்ப்பை ஒத்தி வைப்பதை வரவேற்றுள்ளதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு வந்து விடக்கூடாது என்று அந்தக் கட்சி நினைப்பது தெளிவாகிவிட்டது.
வழக்கை நீட்டிப்பதன் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது.
அயோத்தி விவகாரம் முடிந்து விட்டால் அவர்கள் அதை வைத்து அரசியல் நடத்த முடியாது.
எனவே இந்த விவகாரம் முடிவுக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதை வைத்து அரசியல் நடத்தவே விரும்புகின்றனர்.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாது என்பது முன்னரே உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காலம் கடத்தும் முயற்சி.
அயோத்தி நிலம் என்பது உண்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த விஷயம். நீதிமன்றத்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை அளிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் கல்யாண் சிங்.
அரசியல் ஆதாயம் தேடும் பாஜக-காங்கிரஸ் புகார்:
அயோத்தி விவகாரத்தில் பாஜக தொடர்ந்து அரசியலைப் புகுத்தி ஆதாயம் தேடப் பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், தீர்ப்பு கூறுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததற்குக் கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கூறி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக முயல்கிறது.
அயோத்தி விவகாரத்தில் பாஜக பொறுப்பற்று செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும், அல்லது பேச்சு மூலம் தீர்க்க வேண்டும் என்ற இரு வழிகள் மட்டுமே உள்ளன என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications