சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநில அளவில் மறியல் போராட்டம்-ராமதாஸ்
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ராமதாஸ் பேசுகையில்,
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒரு வருடத்துக்குள் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியாக எடுக்கப்படும் கணக்கின்படி ஒவ்வொரு சாதியிலும் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. 40க்கும் மேற்பட்ட சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்திக்க அணுகி உள்ளோம். உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விரைவில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் மீண்டும் அனைத்து சமூக அமைப்புகளும் கூடி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவோம்.
தமிழ்நாடு முழுவதும் 2 மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நடக்கும் என்றார்.
ராஜபாளையத்தில் பொதுக்குழு கூட்டம்:
இதற்கிடையே வரும் 30ம் தேதி பாமகவின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications