தீர்ப்புக்கு பின்னரும் சமரசத்துக்கு தயார்-முஸ்லீம் சட்ட வாரியம்
இந்த வாரியத்தின் உறுப்பினரான கமால் பரூக்கி நிருபர்களிடம் கூறுகையில்,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை அளிக்கும் தீர்ப்புக்குப் பின்னரோ அல்லது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி்ல் தாக்கலாகும் மனு மீதான தீ்ர்ப்புக்குப் பின்னரும் கூட அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரசத் தீர்வு காண வாய்ப்புள்ளது. அந்த முயற்சிகளையும் நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.
இதன்மூலம் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முஸ்லீம் சட்ட வாரியம் இன்னும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
60 வருடமாக நடந்து வரும் இந்த வழக்கில் நிலம் தங்களுக்கே சொந்தம் என்று முஸ்லீம் சன்னி வக்பு வாரியமும் இந்து மகா சபாவும் வாதாடி வந்தன.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னெள நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது. இது யாருக்கு சாதகமாக இருந்தாலும் எதிர் தரப்பு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.