தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை: மசோதா தாக்கலாகிறது
சென்னை: தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் மசோதா வரும் நவம்பரில் கூடவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள புதிய சட்டப் பேரவையில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் நடைபெறும் என்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அறிவித்துள்ளார்.
இது 13வது சட்டப் பேரவையின் 14வது கூட்டத் தொடர் ஆகும். ஒருவார காலம் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில்
முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் சென்னையின் எல்லையை விரிவுபடுத்த வகை செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications