'சார் போஸ்ட்...!' வெலிக்கடை ஜெயிலில் பொன்சேகாவுக்கு புதிய வேலை!

இலங்கையில் சிங்கள ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தபோது ஈவு இரக்கமில்லாமல் தமிழர்களை கொன்று குவித்தவர் சரத் பொன்சேகா.
கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்த போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்ததில் பொன்சேகா பிரதான பங்கு வகித்தார். இந்த வெற்றிக்கு அவர் முழு சொந்தம் கொண்டாட விரும்பினார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அரசியலில் குதித்து அதிபர் ராஜபக்சேயையும் எதிர்த்தார். அவரால் நாடாளுமன்ற எம்.பியாக மட்டுமே முடிந்தது. அவரது கூட்டணி படு தோல்வியடைந்தது.
ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு 30 மாத கடுங்காவல் தண்டனையை ராணுவ கோர்ட்டு வழங்கியது. ஜனாதிபதி ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத் பொன்சேகா வெலிக்கடை சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது. தனி அறையில் சிமெண்ட் தரையில் விரிப்பு ஒன்றை விரித்து தூங்குகிறார். கைதிகளுடன் வரிசையில் நின்று தட்டை கையில் ஏந்தி சிற்றுண்டியும் மதிய உணவும் வாங்கிச் சாப்பிடுகிறார்.
ஜெயிலில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை ஜெயிலுக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக்கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்வின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த வேலை அவருக்குப் பிடிக்காவிட்டால், நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை தரப்படலாம்.
அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமையான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈழத்தமிழர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சாப்பாட்டுக்காக சரத்பொன்சேகா கையில் தட்டை ஏந்தி வரிசையில் நின்றபோது, தடுப்பு முகாம்களில் சாப்பாட்டுக்காக வரிசையில் ஈழத் தமிழர்களின் நிலை அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும் என்றார்.
இதே வெலிக்கடைச் சிறையில்தான் பல தமிழ்ப் போராளிகள் கண்கள் பிடுங்கப்பட்டு, குரல் வளை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications