பூரியில் பணத்தைப் பங்கிடுவதில் பூசாரிகளுக்குள் அடிதடி-ஒருவருக்கு மூக்கு உடைந்தது

Subscribe to Oneindia Tamil

பூரி: உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகன்னாதர் கோவில் பூசாரிகளுக்கிடையே பணத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது.

ஜெகன்னாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூசாரிகளுக்கு நன்கொடை அளிப்பார்கள். இதை பூசாரிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். நேற்றும் அதேபோ பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். கோவில் கருவறைக்கு அருகே வைத்து பூசாரிகள் அடித்துக் கொண்டதைப் பார்த்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோதலில் ஒரு பூசாரியின் மூக்கு உடைந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது. அது சாமி சிலை மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தரிசனம் நிறுத்தப்பட்டது.

அடித்துக் கொண்ட பூசாரிகளை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் சிலைகளுக்கு பரிகார பூஜை நடத்தப்பட்டு தரிசனம் தொடர்ந்து நடந்தது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு பூசாரிகள் பணத்திற்காக இவ்வாறு அடித்துக் கொண்டு சாமிசிலை மீது ரத்தம் சிந்தும் அளவுக்கு நடந்து கொண்டது பக்தர்களை பெரும் வருத்தத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்க வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+