தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன-குரேஷி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பூர்வாங்க ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார் குரேஷி. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் அதிகமாக உள்ளது. ஆனாலும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம்.
மேலவை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு இருக்கும் எதிர்ப்பு குறித்து தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். இதில் பெரும்பாலான கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவில் திருப்பதியாக உள்ளதாக தெரிவித்தனர். ஒரு சில கட்சிகள் வாக்குப்பதிவின் போது சரியாக ஓட்டு பதிவானதா என்பதை அறிய ரசீது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன.
இது தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திர பராமரிப்பு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தரும். அந்த அறிக்கை கிடைத்த பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
சமீபகாலமாக தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், அச்சுறுத்தல் அதிகமாக நடப்பது கவலை அளிக்கிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கூறப்படுகிறது.
இதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். பீகாரில் அனைத்துக் கட்சி குழு, தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்திலும் புகார்கள் வருவதால் இங்கும் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications