பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், பலூசிஸ்தான் தலைவர் நவாப் அக்பர் பக்தி, முஷாரப் தலைக்கு விலை வைத்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: முஷாரப் ஆட்சிக்காலத்தில் கொடூரமான முறையில் பலுசிஸ்தான் தேசியத் தலைவர் நவாப் அக்பர் பக்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில், முஷாரப்பின் தலைக்கு விலை வைத்துள்ளார் பக்தியின் மகன்.

முஷாரப்பின் தலையைக் கொண்டு வரவோருக்கு ரூ.1 கோடி பணமும், 1000 ஏக்கர் நிலமும் தரப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

முஷாரப் ஆட்சிக் காலத்தில், பலுசிஸ்தான் தேசியத் தலைவர் பக்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு முஷாரப்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது முஷாரப்பின் தலைக்கு விலை வைத்துள்ளார் பக்தியின் மகன் தலால் அக்பர் பக்தி. இவர் ஜமூரி வதான் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

குவெட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் பக்தி பேசுகையில், எனது தந்தை படுகொலை செய்யப்படக் காரணம் முஷாரப்தான். அதேபோல 1999ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புரட்சி செய்து கவிழ்த்தவரும் அவர். எனவே அவர் அரசியல் சட்டத்தின் 6வது பிரிவின்படி மரண தண்டனைக்குத் தகுதியானவர்.

அந்த அடிப்படையில், அவர் தலையைக் கொண்டு வந்து சமர்ப்பிப்போருக்கு ரூ. 1 கோடி பணமும், 1000 ஏக்கர் நிலத்தையும் தருகிறேன் என்றார் பக்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+