For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானா மாநிலம் அமைந்தால் முஸ்லீம்களுக்கு 12 சத ஒதுக்கீடு: சந்திரசேகர ராவ்

Google Oneindia Tamil News

Chandrasekara Rao
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் அமைந்தால் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக 12 சதவீத ஒதுக்கீடு தரப்படும் என்று அறிவித்துள்ளார் சந்திரசேகரராவ்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், "ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

அதற்கு விரைவில் வெற்றி கிடைக்க இருக்கிறது. தெலுங்கானா மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தனி மாநிலத்தை நிச்சயம் பெற முடியும். ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும நடிகர்களின் சினிமா வெளியாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தெலுங்கானா பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதனால் தெலுங்கானா மாநிலம் அமைந்ததும் முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்.

அவர்களுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும் தயாராக இருக்கிறோம்..." என்றார்.

ஆனால் தெலுங்கானாவை பிரிக்கவே கூடாது என மற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X