சவுதி அரேபியாவில் இந்தியர் தற்கொலை?
தென்காசி: தென்காசியை அடுத்த அச்சன்புதூரைச் சேர்ந்தவர் ராமையா மகன் முருகையா. இவரது மனைவி உத்தமி. முருகையா கடந்த 2008-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அடிக்கடி வீட்டுக்கு தொலைபேசி்யில் தொடர்பு கொண்டு வந்த முருகையா கடந்த 3-ம் தேதி கடைசியாக குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகையாவின் செல்போனில் இருந்து சவுதியில் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு முருகையா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக பதில் வந்தது.
இதனால் அதிரிச்சி அடைந்த முருகையாவின் மனைவி உத்தமி, மாமனார் சுப்பையா ஆகியோர் முருகையாவின் கதி என்ன, அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அச்சன்புதூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.