சுயேச்சைகளை வாக்களிக்க அனுமதித்திருந்தாலும் நாங்களே வென்றிருப்போம்-பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐந்து சுயேச்சைகளை வாக்களிக்க அனுமதித்திருந்தாலும் நாங்களே வென்றிருப்போம் என்று பாஜக கூறியுள்ளது.
கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,சுயேச்சை எம்.எல்.ஏக்களை வாக்களிக்க உயர்நீதிமன்றம் அனுமதித்திருந்தாலும் பாஜகவே வென்றிருக்கும். இதையே தற்போது நடந்து முடிந்த வாக்கெடுப்பு நிரூபிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் ஏஜென்ட் போல செயல்பட்டு வருகிறார் கர்நாடக ஆளுநர் பரத்வாஜ். அவரது முயற்சிகளையும் மீறி நாங்கள் வென்றுள்ளோம். பரத்வாஜை நீக்கியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தற்போது மீண்டும் உரத்த குரலில் வலியுறுத்துகிறோம்.
இந்த வெற்றி கர்நாடகத்திற்கும், பாஜகவுக்கும் மிகப் பெரிய வெற்றியாகும் என்றார் ரூடி.












Click it and Unblock the Notifications