நெய்வேலி என்.எல்.சி. விவகாரம்-பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்கள் முடிவு
நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி அனைத்து கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளிக்க உள்ளது.
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் 10- ம் தேதி சென்னையில் தொமுசவுடன், என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.
ஆனால் மற்ற தொழிற்சங்கங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி. சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் சேவை தொடர்பான பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், சாலை மறியல் செய்யக் கூடாது என்றும் தொ.மு.ச, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு, என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம் உள்ளிட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடைக் காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளரும், அதிமுக எம்.எல்.ஏ. வுமான சின்னச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக வரும் 20-ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளது என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications