ராமநாதபுரத்தில் மனை உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல்-திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு
ராமநாதபுரம்: பிளாட் உரிமையாளர்களிடம் ரூ. 47 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலத்தின் மதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்தவர் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி கட்சியின் பெயரில் பலர் மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே கிழக்கு கடற்கரை சாலை அருகே 2.65 ஏக்கர் நிலத்தை 47 பிளாட்டுகளாக பிரித்து பலருக்கு விற்கப்பட்டது.
இதற்கிடையே திமுக, அதிமுக நிர்வாகிகள் கூட்டாக இணைந்து இந்த பிளாட் உரிமையாளர்களிடம் தலா ரூ. 1 லட்சம் என ரூ. 47 லட்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
பிளாட் உரிமையாளரிடம் ரூ. 47 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி பி.டி.ராஜா, அதிமுக நிர்வாகி ஜெயபால், கண்ணன், சிவசாமி, முருகேசன் ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications