திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூ.1.25 லட்சம் கள்ள நோட்டு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மூன்று மாதத்தில் ஒன்றே கால் லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் திருவனந்தபுரம் மண்டல அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இவ்வளவு கள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு எவ்வாறு வந்தது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

விரிவான விசாரணைக்காக இவ்வழக்கை மாநில குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி விடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் செயல்படும் வங்கிக் கிளைகளில் இருந்துதான் கள்ள நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

இதில் 100, 500, 1000 என 251 கள்ள நோட்டுகள் உள்ளன. இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் மூலமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கள்ள நோட்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் ஜூன் மாதம் 29-ம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் தான் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளது. எந்தெந்த வங்கிக் கிளைகளில் இருந்து எவ்வளவு கள்ள நோட்டுகள் எந்தெந்த தேதிகளில் வந்துள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

வங்கியில் கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்பதை அறிவதற்கான கருவிகள் உள்ள நிலையில் எவ்வாறு கள்ள நோட்டுகள் பெறப்பட்டன என்பது புரியாத புதிராக உள்ளது. இது குறித்து போலீ்சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+