For Daily Alerts
Just In
ஈரோடு, வெள்ளோடு சரணாலயத்திற்கு விசிட் அடித்த 109 வகை பறவைகள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சீசனின்போது லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. பெரும்பாலானவை வெளிநாட்டுப் பறவைகள் ஆகும்.
அந்த வகையில், வெள்ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு 109 வகை பறவைகள் வந்து போயுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெள்ளோடு சரணாலயத்திற்கு செப்டம்பர் மாதம்தோறும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். அப்போது வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருக்கும். முட்டையிட்டு, குஞ்சு பொறித்து அவற்றுடன் திரும்பிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு இதுவரை 109 வகை பறவைகள் இங்கு வந்துள்ளன. வருகிற மாதங்களில் மேலும் பல பறவைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
Comments
Story first published: Friday, October 15, 2010, 15:47 [IST]