முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்-எஸ்.எம்.எஸ். மூலம் வந்தது
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் முதல்வர் கருணாநிதியைக் கொலை செய்யப் போவதாக கூறி மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. சென்னை போக்குவரத்து போலீசின் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த எஸ்.எம்.எஸ். மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. முதல்வர் வீட்டை வான்வழியாக குண்டு வீசி தகர்ப்போம் என்று அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்த எஸ்.எம்.எஸ். சென்னை செம்பாக்கத்திலிருந்து கோபிநாத் என்பவர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications