பீகார் மாநிலத்தின் துயரங்களுக்கு காங்.கும், பிரதமரும் சம பொறுப்பு-லாலு
பாட்னா: பீகார் மாநிலத்தின் அனைத்துத் துயரங்களுக்கும் பிரதமரும், காங்கிரஸும் கூட்டுப் பொறுப்பாவார்கள் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்.
இதுகுறித்து பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது லாலு கூறுகையில், மாநிலம் இன்று பின் தங்கிப் போயுள்ளதற்கு பிரதமரும், காங்கிரஸும்தான் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.
பீகாரில் நானும், நிதீஷ்குமாரும் மட்டும் ஆட்சி புரியவில்லை. மாறாக காங்கிரஸும் ஆட்சியில்இருந்ததை பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும். பீகார் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் நீண்ட காலம் ஆட்சி புரிந்துள்ளது. அங்கு மட்டும் வளர்ச்சி வந்து விட்டதா.
பீகாரில் இன்றுவளர்ச்சி இல்லை என்று சொன்னால், பிரதமரும், அவர் சார்ந்த கட்சியும்தான் பொறுப்பாவார்கள்.
நிதீஷ்குமார் மட்டும் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூற முடியாது. அவருடைய அரசு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரங்களை முறையாக செலவிடவில்லை, பயன்படுத்தவில்லை என்றார் லாலு.












Click it and Unblock the Notifications