வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி தேமுதிக ஆர்பாட்டம்
திருப்பூர்: மத்திய அரசு வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஆறு மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தொழிலை நம்பி 50 லட்சம் பேர் உள்ளனர்.
ஒரு கண்டி பஞ்சின் விலை ஒரே ஆண்டில் 23 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ. 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரூ. 140 -க்கு விற்ற ஒரு கிலோ நூல் தற்போது ரூ. 205 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் பின்னலாடை மற்றும் ஐவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள 70 சதவிகித சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாகும் பஞ்சை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் அதை நூலாக்கி பின்னர் ஆடையாக்கி மதிப்பை கூட்டுவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.
இத்தொழிலை சீராக நடத்த மாதத்திற்கு 22 லட்சம் பேல்கள் என்ற வீதம் டிசம்பர் வரை 55 லட்சம் பேல்கள் கையிருப்பு இருக்க வேண்டும்.
ஆனால் உள்நாட்டுத் தேவைக்கே பஞ்சு கிடைக்காத நிலையில், வெளிநாடுகளுக்கு நவம்பர் முதல் தேதியில் இருந்து 55 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக உலகச் சந்தையில் இந்தியாவுடன் கடும் போட்டியிடும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தேமுதிக சார்பில் எனது தலைமையில் வரும் 22-ம் தேதி மாநகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications