என்எல்சி தொழிலாளர் விவகாரம்: கடலூரில் முழுஅடைப்பு
கடலூர்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் அக்டோபர் 19-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என அனைத்துக் கட்சிக் குழு அறிவித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் என்எல்சி ஒப்பந்த தொழிலளார்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிக் குழுவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடலூரில் நடந்த அனைத்துக் கட்சிக் குழு கூட்டத்தில், வரும் 19ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லி சென்று, பிரதமர் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications