கோவில்பட்டியில் போலீஸ் இன்பார்மருக்கு அடி உதை: மருத்துவமனையில் அனுமதி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் தலைமறைவாக உள்ள குற்றவாளியின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்த போலீஸ் இன்பார்மருக்கு அடி, உதை விழுந்தது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவர் மீது அங்குள்ள மேற்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. இதனால் அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் இன்பார்மரான கருத்தப்பாண்டி (28) குற்றவாளி சின்னராஜின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ், அவரது நண்பர் மாரிமுத்து மற்றும் சுரேன் உள்ளிட்ட நால்வர் கருத்தப்பாண்டியை கடத்திச் சென்று அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த கருத்தப்பாண்டி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications