அரசியலில் குதித்த பால் தாக்கரே பேரன்... தசரா பேரணியில் அறிமுகம்!
மும்பை: சிவ சேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது பேரன் ஆதித்யா தாக்கரேவை அரசியலல் களத்தில் இறக்கினார். நேற்று நடந்த தசரா பேரணியில் ஆதித்யாவை அறிமுகப்படுத்தி பேசினார்.
தாக்கரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினரான பால், உத்தவ், ஆதித்யா(20) ஆகியோர் நேற்று மக்களுக்கு ஒன்றாக காட்சியளித்தனர்.
உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தெற்கு மும்பையில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் கல்லூரியில் படித்து வருகிறார். பால் தாக்கரே ஆதித்யாவை சிவ சேனாவின் இளைஞர் அணியான யுவசேனாவிற்குத் தலைவராக்கி அவருக்கு ஒரு வாளை பரிசளித்தார். தன் பேரன் கட்சிப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்தினார்.
ஆதித்யா 16 வயதாக இருக்கும்போதே மை தாட்ஸ் இன் பிளாக் அன்ட் ஒயிட் என்னும் ஆங்கிலக் கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இது ஹிந்தியிலும், மராத்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
உத்தவ் தாக்கரே கடந்த 2008-ம் ஆண்டு தன் மகன் அரசியலுக்கு வருவது பற்றி சூசகமாகத் தெரிவித்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதித்யா சிவ சேனாவிற்காக பிரசாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications