போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பட்டுக்கோட்டை வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள கோன்பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது சுபான் (26). இவர் அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவர் சமர்பித்திருந்த ஆவணங்களை அமெரிக்கா தூதரக அதிகாரிகள் சரி பார்த்தபோது அவை போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் இது குறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு சென்ற போலீசார் அங்கு விசா வாங்க காத்திருந்த முகமது சுபானை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications