எம்எஸ் கில் வெளிநாட்டுப் பயணத்துக்கு பிரதமர் அனுமதி மறுப்பு!
சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள், இந்த போட்டிக்காக ஒதுக்கப்பட்ட ரூ 70 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் போன்றவை காரணமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஆகியோர் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் பிரதமர்.
இருவரையும் பதவி நீக்கம் செய்யும் முடிவில் பிரதமர் இருப்பதாகவும் கூறப்படுகிரது.
குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் எம்எஸ் கில்லை அழைத்து பிரதமர் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக எந்த அக்கறையும் காட்டாத கில்லிடமிருந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை பறிக்க பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் விளைவாக, காமன்வெல்த் போட்டி முடிந்ததும் ஸ்காட்லாந்து நாட்டுக்கு செல்ல கில்லுக்கு, அனுமதி மறுத்துள்ளார் பிரதமர்.
காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடப்பதால் வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதி தர இயலாது என்று பிரதமர் விளக்கமும் கூறியுள்ளார்.